திரு. மணிரத்தினம் அவர்களுக்கு...

Thursday 21 April 2016  at April 21, 2016;

திமுக, காங்கிரஸ் கூட்டணி சார்பாக காட்டுமன்னார்கோயில் தொகுதியில் போட்டியிடும் திரு. K.I. மணிரத்தினம் அவர்கள் படித்தவர், பண்பாளர், உழைப்பால் உயர்ந்தவர். அனுக்கிரகா constructions மூலம் பொருளீட்டி,  தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்திருக்கலாம் ஆனால் அவர் அந்த குறுகிய வட்டத்தில் இருந்து வெளிவந்து காட்டுமன்னார்கோயில் மக்களுக்கு பல உதவிகளை தன் சொந்த பணத்தில் செய்து வருகிறார். இது ஏதோ இன்றோ, நேற்றோ செய்து வருவது அல்ல பல ஆண்டுகளாக இதை தொடர்ந்து செய்து வருகிறார்.

காட்டுமன்னார்கோயிலுக்கு என்ன தேவை என்பது இங்கு பிறந்து வளர்ந்த ஒருவரால் மட்டுமே புரிந்து கொள்ளமுடியும். அத்தோடு தன் ஈட்டிய செல்வத்திலே ஒரு பங்கை ஏழைகளுக்கு செலவழிக்க முன்வருபவர், ஒரு அரசின் அங்கீகாரம் கிடைத்தால் இன்னும் நல்லது செய்வார் என்பது தின்னம்.

திரு.மணிரத்தினம் அவர்களிடம் நான் பேசியது கிடையாது, அதனால் அவரின் தேர்தல் வாக்குறுதிகளை கேட்க விரும்புகிறேன். இந்த 5 வருடம் அவருக்கான உறுதியான வாய்ப்பு என்பது அவர் காட்டுமன்னார்கோயில் மக்களுக்கு கொடுக்கும் வாக்குறுதிகளே!! இதோ அவரின் Facebook பக்கம் https://www.facebook.com/Dr-kIManirathinam-779206098862707/ இதன்மூலம் அவர் தான் கொடுக்கவிரும்பும் வாக்குறுதிகளை பதிவுசெய்தால், நான் இங்கு அதை பிரசுரம் செய்ய தயார்.

ஒரு MLA வுக்கான அதிகாரம் என்ன என்பது எங்களுக்கு தெரியாது ஆனால் ஒரு MLA நினைத்தால் என்னவெல்லாம் செய்யலாம் என்பது எங்களுக்கு தெரியும். இதோ சில வருடங்களுக்கு முன்பு நாட் டிவிட் செய்ய சில கோரிக்கைகள்.




இன்னும் சில;

1. பாதாள சாக்கடை திட்டம் சாத்தியமா? பல்கி பெருகும் குடியிருப்புகள் மூலம் உருவாகும் சாக்கடையின் வடிகால் எது?. சாத்தியம் என்றால், அதை வடவாறு ஆற்றின் ஊடே கலக்காமல் கடலில் கலக்கக்கூடிய வகையில் திட்டங்கள் இருக்கின்றனவா?

2. காட்டுமன்னார்கோயிலின் முக்கிய சாலைகளை ஆக்கிரமித்து பாதசாரிகளுக்கு இடைஞ்சல்  கொடுக்கும் கடைகள் அகற்றப்படுமா?

3. வீராணம் ஏரியில் படகு குழாம் அமைத்து அதை சுற்றலா தளமாக ஆக்கும் திட்டம் உள்ளதா?

4. பேருந்து நிலையம் - வாழ்ந்து கெட்ட வீட்டின் சிதிலங்களை போல் உள்ள நம் பேருந்து நிலையம் மாற்றப்படுமா?

5. பேருந்து நிலையத்தில் கழிப்பறை வசதிகள் சொல்லக்கூடிய அளவில் இல்லை என்பது உண்மை. இவை சரிசெய்யப்படுமா?

6. பேருந்து நிலையத்தின் அருகில் உள்ள குளம் குப்பைகளின் கூடாரமாக இருக்கிறதே.. இதை சீர்செய்யமுடியுமா?

7. தனி ஒருவரின் குடும்பம் வாழ, அவர்கள் பொருள் ஈட்ட,  பன்றிகளை தெருவுக்கு தெரு உலாவ விட்டு வீட்டின் பின்புறத்தை பன்றிகளின் தொட்டிகளாக மாற்றி கொண்டிருப்பவர்களை அகற்ற முடியமா?

8. கிராமங்களில் இருந்து காட்டுமன்னார்கோயிலுக்கு வரும் பெண்மனிகள், குழந்தைகள் மற்றும் வயதானவர்கள்  இயற்கை உபாதைகளுக்குகூட ஒதுங்க இடம் இல்லை. மன்னையின் முக்கிய வீதிகளில் இலவச அல்லது கட்டண கழிப்பறைகள் கட்ட முடியமா?

9. தொழிற்சாலைகள் (கெமிக்கல் அல்ல) கொண்டுவந்து நம் ஊர் சுற்றவட்டார மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க திட்டம் உள்ளதா?

10. பேருராட்சி நகராட்சியாக உயர்வு பெறுமா?

11. காட்டுமன்னார்கோயில்-சிதம்பரம், காட்டுமன்னார்கோயில்-சேத்தியாதோப்பு என இங்கிருந்து போகும் சாலைகள் புதிதாய் போடமுடியமா?

12. இரவு நேரங்களில் அதிகமாக நிகழும் விபத்துகளை தவிர்க்க வெளிப்புற சாலைகளின் இரு மருங்கிலும் reflector பொருத்தப்படுமா?

பிரபல வலைபதிவர் வா.மணிகண்டன் அவர்கள் எந்த கட்சியையும் சாராதவராக இருந்தாலும் அவர் கோபிச்செட்டிபாளையம் வேட்பாளரிடம் பெற்ற வாக்குறுதிகள் என்னை கவர்ந்தது. அட இது நல்லா இருக்கே என வேட்பாளர் வாக்குறுதிகளை படித்த போது அது கிட்டதட்ட எல்லாதொகுதிகளுக்கும் பொருந்துவதாக இருந்தது. அதனால் அதிலிருந்து சில.. திரு. மணிரத்தினம் அவர்களுக்கு.

13. கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் முறையாக அமைக்கப்பட்டு பராமரிக்கப்படுவதன் மூலமாக தொகுதியின் பிரச்சினை நீண்டகால நோக்கில் கட்டுப்படுத்தப்படும். இது சாத்தியமா?

14. தொகுதி மக்களின் பிரச்சினைகளை சட்டமன்றத்தில் முன்வைப்பதோடு நில்லாமல் குறைந்தபட்சமாக இரண்டு அல்லது மூன்று தீர்வுகளும் முன்வைக்கப்படும். இந்தத் தீர்வுகளும் பொதுமக்களின் ஆலோசனையோடு கண்டறியப்படும். இது முடியுமா?

15. இதுவரை அமைக்கப்படாத தொழில் வளாகம் (சிப்காட்) அமைக்கப்பட்டு உள்ளூரிலேயே வேலை வாய்ப்புகளைப் பெருக்குவதற்கான நடவடிக்கைகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்படும். தீர்வு காணப்படுமா?

16. நகரத்தில் போக்குவரத்து நெரிசலை சீர்படுத்தும் வகையில் மேம்பாலம் கட்டுவதற்கான பூர்வாங்கப் பணிகள் உடனடியாகத் தொடங்கப்படும். அதே போல, மக்களின் நீண்டகால கோரிக்கையான சுற்றுப்பாதை (ரிங் ரோடு) கொண்டுவருவதற்கான திட்டங்கள் மேற்கொள்ளப்படும். இதுபோல் சாத்தியமா?

17. புதிய பூங்காக்களும் குழந்தைகளுக்கான விளையாட்டுத் திடல்களும் அமைக்கப்படும். இது முடியமா?

18. தொகுதி முழுவதிலும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் மிகச் சிறப்பான முறையில் தரம் உயர்த்தப்படுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் சட்டமன்ற உறுப்பினரால் மேற்கொள்ளப்படும். இதை நீங்கள் செய்ய தயாரா?

19. அரசு மருத்துவமனையானது பெருநகர மருத்துவமனைகளுக்கு இணையாகத் தரம் உயர்த்தப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். நவீன உபகரணங்கள் வாங்குவதற்கும், உள்கட்டமைப்பு வசதிகளைப் பெருக்குவதற்கும் சட்டமன்ற உறுப்பினரின் நிதி முறையாகத் திட்டமிடப்பட்டுச் செலவு செய்யப்படும். இதை நிறைவேற்றுவீர்களா?

20. அரசுப் பொறியியல் கல்லூரி, அரசுக் கலைக்கல்லூரி மற்றும் அரசு பாலிடெக்னிக் ஆகியவற்றைக் கொண்டு வருவதற்காக சட்டமன்றத்தில் தொடர்ந்து குரல் எழுப்பட்டு முயற்சிகள் மேற்கொள்ளப்படும். உங்களால் முடியமா?

21. உள்ளூரிலேயே இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களுக்கென கணினி பயிற்சி மற்றும் தொழில்நுட்பப் பயிற்சிகளுக்கான பயிற்சி நிறுவனங்கள் தொடங்கப்படும். சாத்தியமா?

22. ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவற்றைப் பெறவும் அரசாங்கத்தின் உதவிகளைப் பெறுவதற்கான வேலைகளையும் சட்டமன்ற உறுப்பினரின் அலுவலகத்தில் நியமிக்கப்படும் ஊழியரே செய்து தருவார். ஊழியரின் பணி சட்டமன்ற உறுப்பினரால் நேரடியாகக் கண்காணிக்கப்படும். இது சாத்தியமா?

23. தொகுதியில் உள்ள அனைத்து ஒன்றியங்களிலும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறக்கப்படும். வாரத்தில் ஒரு நாள் அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பினரை மக்கள் சந்திக்கவும் மீதமுள்ள நாட்களில் காட்டுமன்னார்கோயிலில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் எம்.எல்.ஏவைச் சந்தித்து மக்கள் தங்களது குறைகளைத் தெரியப்படுத்துவதற்கும் வசதிகள் உருவாக்கித் தரப்படும். நீங்கள் இந்த வாக்குறுதியை தர தயாரா?

24. கடுமையான வரட்சியை சந்திக்கும் ஊராட்சிகளின் நீர்த் தேவையைக் களையும்படியான நிரந்தர குடிநீர்த் திட்டம் தொகுதி முழுவதும் படிப்படியாகச் செயல்படுத்தப்படும். இது சாத்தியமா?

சில உடனடி திட்டங்கள் நகர மக்களுக்காக ;

25. காலை மாலை என இருநேரமும் குடிநீர் வினியோகம்.

26. அசுத்தமான இடங்களில் வாரத்தின் இருநாட்கள் பிளீச்சிங் பவுடரை தெளித்தல்

27. HDFC, ICICI, Axis, TMB, KVB என தனியார் வங்கிகள் காட்டுமன்னார்கோயிலில் சேவை தொடங்குவதற்கு வழிகாட்டுதல்.

28. SBI பாங்கின் கூட்ட நெரிசலை தவிர்க்க Tiny SBI கொண்டு வருவதற்க்கு முயற்ச்சித்தல்.

29. சென்ட் பேக்டரி என்பது காட்டுமன்னார்கோயில் மக்களின் நீண்ட நாள் கோரிக்கை.

30. படித்து வேலை இல்லாமல் இருக்கும் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்துதல்.

31. பட்டதாரிகள் மற்றும் சுயதொழில் புரிவோர்க்கு அவர்களின் entrepreneur கனவை நனவாக்க மிகக் குறைந்த வட்டியில் கடன் கிடைக்க முயற்சி.

32. லால்பேட்டை மற்றும் சுற்றியுள்ள இஸ்லாமிய மக்கள் அடிக்கடி வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள சென்னை வருவார்கள், அவர்களுக்கு உதவும் பொருட்டு காட்டுமன்னார்கோயில்-லால்பேட்டை-கொள்ளுமேடு-ஆயங்குடி ஆகிய பகுதிகளில் இருந்து சென்னைக்கு சொகுசு பேருந்து.

33. வாரம் ஒரு முறை லால்பேட்டை அருகில் கூடும் சந்தைக்கு கட்டிடம்.

இன்னும் வரும்...

No comments:

Post a Comment