படம் பார்த்து கவிதை சொல்லல்

Wednesday 25 January 2012  at January 25, 2012;
பெருவெளியை நீலமாக கொண்ட பூளோகத்தில் சீன
பெரும் சுவற்றின் கோடாய் மாறுவேனோ

சமவெளி பாலைவனத்தில் மலைபோல் எழுந்து நிற்கும்
கிரேக்க பிரமிடாய் எழுவேனோ

நீக்கமற நிறைந்திருக்கும் காடுகளுக்கு நடுவே ஓடும்
அமேசான் ஆறுபோல் நடப்பேனோ

பசிபிக் பெருங்கடலின் மர்ம முக்கோணம்
பெர்முடா போல் ஆழ்ந்து போவேனோ

சாய்கோபுரமாய் சாய்வேனோ, நயாகரவாய் வீழ்வேனோ
இமயமலையாய் உருகுவேனோ, கங்கையை போல் பாய்வேனோ

தட்டையான பார்வையில் தனித்துவமாய் தெரிபவை
தவிக்க முடியதாவையாக ஆகி போகிறது

பிரமாண்டங்களை மனிதமனம் உவமையாக்குகிறது
பிரமிக்கும் கைவண்ணங்களை உள்வாங்கிகொள்கிறது

நிலை கண்ணாடியாய் நிலைநிறுத்தபட்ட வெள்ளை காகிதத்தில்
மனித மனம் கட்டவிழ்கிறது

உயிர்ப்பின் உந்துதலால் அது தனித்து எழுகிறது
வீழ்வது எழுவதெற்கேயாயினும் கை விட்டபாடில்லை

என்னுள் ஒருவன் எவன் அவன் என காணகிடைத்தேன்
காட்சி பிழையோ என என் நிழல் படைத்தேன்

குட்டியாய் இருந்தபோது கட்டிய குச்சியில் இன்றும் கட்டப்படும் யானை
போலன்றோ தட்டையாய் இருந்திருக்கிறேன் நிழலையும் காணாது

பற்றுதல் துறக்கும் நேரத்தில் படைப்பின் நோக்கம் தெரிகிறது
கைபற்றுதல் காண என் நெஞ்சம் அலைபாய்கிறது.

மரம் ஓய்வெடுக்க நினைத்தாலும்
காற்று விடுவதில்லை என மாசேதுங் சொன்னது இதைதானோ?

1 comment:

Dhileepen said...

என்னுள் ஒருவன் எவன் அவன் என காணகிடைத்தேன்
காட்சி பிழையோ என என் நிழல் படைத்தேன்


indha line romba nalla iruku....

Post a Comment